ஊட்டி: தமிழ்நாட்டில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்துடன் கழிவு மேலாண்மை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சியில் தினமும் 35 டன் கழிவு மற்றும் குப்பை சேகாரமாகிறது. குப்பையைக் கையாள்வது மற்றும் அகற்றுவதில் சிக்கல்கள் நிலவி வருகின்றன. உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளும் ஊட்டிக்கு வருவதால் தினமும் அதிக அளவு குப்பை சேகாரமாகிறது. ஆட்கள் பற்றாக்குறை, காலநிலை மற்றும் நில அமைப்பு ஆகிய காரணங்களாக குப்பையை சேகரிப்பதில் சவால் நிலவுகிறது.