சென்னை: தமிழகத்தில் வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில் 5 மாவட்டங்களில் நேற்று 102 டிகிரி வெயில் கொளுத்தியது. தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரையில் வெயில் அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னை, கடலூர், ஈரோடு, மதுரை, நாகப்பட்டினம், திருச்சி, திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்து காணப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக ஈரோடு, வேலூர், திருச்சி, மதுரை, கரூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று 102 டிகிரி வெயில் கொளுத்தியது. மேலும், தஞ்சை, திருத்தணி, சேலம் 100 டிகிரி, பாளையங்கோட்டை, நாகப்பட்டினம் 99 டிகிரி, சென்னை, கடலூர் 97 டிகிரி வெயில் நிலவியது. அதன் தொடர்ச்சியாக 14ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்.
The post தமிழகத்தில் வெப்பநிலை நீட்டிப்பு 5 மாவட்டங்களில் 102 டிகிரி வெயில் கொளுத்தியது appeared first on Dinakaran.