தமிழகத்தில் 7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புறங்களில் வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் எல்லைகளை சுற்றி அமைந்துள்ள பெரும்பாலான ஊரக பகுதிகள் நகர்ப்புற பகுதிகளுக்கு இணையாக வளர்த்து வருகின்றன. அந்த பகுதிகளுக்கு, நகர்ப்புறங்களுக்கு இணையாக சாலை, குடிநீர், தெருவிளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை விரிவுபடுத்துவது அவசியமாகிறது.