கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 9 பேருக்கு, கோவை மகளிர் நீதிமன்றம் நாளை ( மே 13) தீர்ப்பு வழங்குகிறது.
கோவையை அடுத்த பொள்ளாச்சியில் இளம் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் கடந்த 2019 பிப்ரவரி மாதம் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் துறையில் புகார் அளித்தார்.