மதுரை: தமிழகம் முழுவதும் நடந்த உடல் உறுப்பு திருட்டை விசாரிக்க ஐஜி தலைமையில் சிறப்பு படை அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த சத்தீஸ்வரன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவின் விவரம்: நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்களிடமிருந்து சட்டவிரோத சிறுநீரக திருட்டு நடைபெற்று ள்ளது. ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வழங்கி சிறுநீரகத்தை பெற்றுள்ளனர். இது மனித உறுப்புகள் மற்றும் திசுக்கள் மாற்றுச் சட்டப்படி குற்றமாகும்.