கோவை / மேட்டுப்பாளையம்: தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினர். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:
மும்மொழிக் கல்வித் திட்டத்துக்கு ஆதரவாக நடத்தபத்படும் கையெழுத்து இயக்கத்துக்கு அதிக ஆதரவு உள்ளது. ஆனால், கையெழுத்து இயக்கம் நடத்துவோரை கைது செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதல்முறையாக தமிழகத்தில் உள்ள சிஐஎஸ்எஃப் மையத்துக்கு ராஜாத்திய சோழனின் பெயர் சூட்டியுள்ளார்.