சென்னை: தமிழக அரசின் தூய்மை இயக்கம் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 1,100 அரசு அலுவகங்களில் இருந்து நேற்று ஒரே நாளில் 250 டன் கழிவு பொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து தமிழக சிறப்பு திட்ட செயலாக்க துறை செயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் திடக் கழிவு மேலாண்மைக்கான தூய்மை இயக்கத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இதை செயல்படுத்த ‘தூய்மை தமிழ்நாடு நிறுவனம் (CTCL) என்ற அமைப்பு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் முதல் பணியாக, உலக சுற்றுச்சூழல் தினமான நேற்று மாநிலம் முழுவதும் 1,100 அரசு அலுவலகங்களை சுத்தம் செய்யும் நோக்கில் அலுவலக கழிவுகளை சேகரிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.