புதுச்சேரி: புதுச்சேரியில் தவெக சார்பில் அஞ்சலையம்மாள் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. “தமிழக அரசியலில் வெற்றியைத் தீர்மானிக்கும் இடத்துக்கு விஜய் வந்துவிட்டதாக,” இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் சவுந்தரராஜன் கூறினார்.
புதுவையில் மரப்பாலம், அண்ணாசிலை, அண்ணாசாலை ஆகிய இடங்களில் அஞ்சலையம்மாள் உருவப்படம் வைக்கப்பட்டு அஞ்சலி இன்று (பிப்.20) செலுத்தப்பட்டது. மரப்பாலத்தில் நடந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழகத்தின் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சவுந்தர்ராஜன் பங்கேற்று அஞ்சலையம்மாள் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தி, ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினார்.