தாம்பரம்: “இருமொழிக் கொள்கையை செம்மைப்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு நான் கோரிக்கை வைக்கிறேன்.” என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று (மார்ச் 28) மாலை தாம்பரம் சண்முகம் சாலையில் இரு மொழி கொள்கைக்கு ஆதரவாகவும், இந்தியை திணிக்கும் மத்திய அரசை கண்டித்தும் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் வடக்கு மாவட்ட தலைவர் ஆர். எஸ் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பங்கேற்றார்.