
நாமக்கல்: அரசு திறக்கவுள்ள குவாரிகளில் மணலுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இந்த சங்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற மாநிலத் தலைவர் கே.ராஜசேகர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் சுமார் 75 ஆயிரம் மணல் லாரிகள் இயங்கின. கடந்த 2 ஆண்டுகளாக அரசு மணல் குவாரிகள் மூடப்பட்டதால், லாரி உரிமையாளர்கள் பலர் வாங்கிய கடனை செலுத்த முடியாமல் லாரிகளை விற்பனை செய்துவிட்டனர். தற்போது 50 ஆயிரம் மணல் லாரிகள் மட்டுமே உள்ளன.

