திருவள்ளூர்: நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்களை அவமதிக்கும் வகையில் பேசிய ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் திமுக சார்பில் நேற்று போராட்டம் நடந்தது. இதில் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உருவப்பொம்மையை தீ வைத்து எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்ற பட்ஜெட் மீதான விவாத கூட்டம் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று கல்வி மீதான விவாதம் நடந்தது.
அப்போது திமுக தென்சென்னை எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், தமிழகத்திற்கு தரவேண்டிய கல்விக்கான நிதியை உடனே தரவேண்டும், மும்மொழி கொள்கையை கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் கேள்வி எழுப்பினார்.அதற்கு ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசுகையில், தமிழ்நாட்டு எம்பிக்கள் ‘அநாகரிகமானவர்கள்’ என இழிவுப்படுத்தும் வகையில் பேசினார். இதற்கு திமுக எம்பிக்கள் அவையில் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதுதொடர்பாக திமுக எம்பி கனிமொழி ஒன்றிய அமைச்சரின் அநாகரிகமான பேச்சை உடனே அவையிலேயே கண்டித்தார்.
மேலும், தர்மேந்திர பிரதான் மீது மக்களவை விதி 223ன் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கினார். இதற்கிடையே ஒன்றிய அமைச்சரின் ‘நா’ தடித்த பேச்சுக்கு தமிழக மக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள், கல்வியாளர்கள் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனே பதவி விலக வேண்டும். தமிழ்நாட்டு எம்பிக்களிடம் அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதேநேரம், தமிழக மக்களுக்கு எதிராக தொடர்ந்து அவதூறாக பேசிய வரும் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து திமுகவினர் மாநிலம் முழுவதும் 125 இடங்களில் சாலை மறியல் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த போராட்டங்களில் திமுகவினருடன் பொதுமக்கள் மற்றும் பெண்கள் அதிகளவில் கலந்து கொண்டனர். திருவள்ளூரில் மேற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்டச் செயலாளர் திருத்தணி எஸ்.சந்திரன் எம்எல்ஏ, வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ தலைமையில் ஒன்றிய அமைச்சரின் உருவ பொம்மையை செருப்பால் அடித்து, எரித்து ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர் கே.திராவிட பக்தன், நகர, ஒன்றிய செயலாளர்கள் சி.சு.ரவிச்சந்திரன், மகாலிங்கம், கூளூர் ராஜேந்திரன், அரிகிருஷ்ணன், சீனிவாசன், பொதுக்குழு உறுப்பினர் சிட்டிபாபு, மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் பொன் பாண்டியன், ஆணழகன் டி.ஆர்.திலீபன், சரஸ்வதி சந்திரசேகர், நேதாஜி, விஜயகுமார், காந்திமதி, நகர நிர்வாகிகள் கமலக்கண்ணன், ராஜேஸ்வரி கைலாசம், இந்திரா பரசுராமன் சம்பத்ராஜா, செல்வகுமார், சீனிவாசன், பவளவண்ணன், நகர மன்ற உறுப்பினர்கள் பிரபாகரன், ஜான், செல்வக்குமார், அயூப் அலி, நீலாவதி பன்னீர்செல்வம், அருணா ஜெய்கிருஷ்ணா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருமழிசை பேரூர் திமுக சார்பில் பேரூர் செயலாளர் தி.வே.முனுசாமி தலைமையில் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் உருவ பொம்மையை எரித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதில் பேரூர், வார்டு நிர்வாகிகள், பேரூராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். பூந்தமல்லி மார்க்கெட் பகுதியில் நகரச் செயலாளர் ஜி.ஆர். திருமலை தலைமையில் தர்மேந்திர பிரதான் கொடும்பாவியை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஒன்றிய அரசுக்கு எதிராகவும் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர். இதில் பூந்தமல்லி நகர்மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர், துணைத்தலைவர் ஸ்ரீதர், நகர நிர்வாகிகள் துரை பாஸ்கர், அப்பர் ஸ்டாலின், டெல்லி ராணி மலர்மண்ணன், அசோக் குமார், புண்ணியகோட்டி, அன்பழகன், நெல்சன், சௌந்தரராஜன், யுவராஜ் உட்பட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.
இதேபோல், திருவேற்காடு பேருந்து நிலையம் அருகே நகர்மன்றத் தலைவரும், நகரச் செயலாளருமான என்.இ.கே.மூர்த்தி தலைமையில் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவரது உருவ பொம்மையை செருப்பால் அடித்து தீயிட்டுக் கொளுத்தி முழக்கங்கள் எழுப்பினர். இதில் திருவேற்காடு நகர நிர்வாகிகள் பெஞ்சமின், நடராஜன், பனு அரசு, காந்தி, இளங்கோ, உமாபதி, ராஜூ, சத்தியகிரி, சரவணன், செல்வதுரை, குமார், கெஜா, விநாயகம், ஜெகன், ஆசைதம்பி, அப்பு ஜெபராஜ், நாராயணன், சுரேஷ், நரேஷ், ராஜேஷ், ரஜினி, பேபிஸ்ரீ, அமலேஷ்வரி உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.
சென்னையில் தமிழக முதல்வரின் சொந்த தொகுதியான கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவிக நகர் பேருந்து நிலையம் அருகே பகுதி செயலாளர் ஐசிஎப் முரளி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சந்துரு, இளைஞரணி துணை அமைப்பாளர் தனசேகர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும், சிந்தாதிரிப்பேட்டை, ஆர்.கே.நகர், ராயபுரம், துறைமுகம், ஆலந்தூர் பரங்கிமலை சுரங்கப்பாதை, பழவந்தாங்கல், பூந்தமல்லி, திருவேற்காடு, ஆவடி, அம்பத்தூர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில் திமுகவினர் சாலை மறியல் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதேபோல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒன்றியம் வாரியாக திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பொதுமக்கள் தன்னெழுச்சியாக கலந்து கொண்டதால் போராட்டம் நடந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
The post தமிழக எம்பிக்களை அவமதிக்கும் வகையில் பேச்சு ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உருவபொம்மை எரிப்பு, ஆர்ப்பாட்டம்: தமிழகம் முழுவதும் 125 இடங்களில் திமுகவினர் சாலை மறியலால் பரபரப்பு appeared first on Dinakaran.