குமுளி: கேரளாவில் கால்நடைகளைக் கொன்று பொதுமக்களை அச்சுறுத்தி வந்த புலியை வனத் துறையினர் இன்று (மார்ச் 17) மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க முயன்றனர். ஆனால், அவர்களை புலி தாக்கத் தொடங்கியதால் துப்பாக்கியால் சுட்டனர். இதில் புலி அதே இடத்தில் இறந்தது.
தமிழக கேரள எல்லையான குமுளி அருகே வண்டிப்பெரியாறு அரணக்கல் குடியிருப்பு பகுதியில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக புலி நடமாட்டம் இருந்து வந்தது. அவ்வப்போது ஆடு உள்ளிட்ட கால்நடைகளையும் கொன்றது. புலியைப் பிடிப்பதற்காக கண்காணிப்பு கேமரா மற்றும் ட்ரோன் மூலமும் வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.புலியைப் பிடிக்க கூண்டும் வைக்கப்பட்டது.