டெல்லியில் முகாமிட்டுள்ள காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள், பிரியங்கா காந்தியை நேற்று சந்தித்து மாநில காங்கிரஸ் தலைவரை மாற்ற வேண்டும் என்ற கோரி்க்கையை வலியுறுத்தினர்.
தமிழக காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற செல்வப்பெருந்தகை, மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, தொண்டர்களை சந்தித்து கருத்துகளை கேட்டு வந்தார். அப்போது தமிழகத்தில் காங்கிரஸை பலப்படுத்துவோம் என தொண்டர்கள் மத்தியில் உறுதி அளித்திருந்தார். அதைத் தொடர்ந்து செயல்படாத மாவட்ட தலைவர்கள் மாற்றப்படுவார்கள் என்றும், நன்றாக வேலை செய்யும் மாவட்டத் தலைவர்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் தெரிவித்திருந்தார்.