சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் தமிழில் கும்பாபிஷேகம் நடத்த அரசாணை பிறப்பிக்கக் கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கில் அரசின் கருத்தைக் கேட்டு தெரிவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம் மருதமலை முருகன் கோயிலில் வரும் ஏப்.4-ம் தேதியன்று கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில், குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த உத்தரவிடக் கோரி நாம் தமிழர் கட்சியின் மாநில செயலாளரான விஜயராகவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ‘தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் தமிழில் கும்பாபிஷேகம் நடத்தக் கோரி ஒவ்வொரு முறையும் மனுதாரர்கள் விண்ணப்பிக்க நேரிடுவது வேதனைக்குரியது.