தமிழக சிறைகளில் உள்ள வெளிநாட்டு கைதிகள் தங்களது உறவினர்களுடன் தொலைபேசியில் பேச வசதி ஏற்படுத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கில், இது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தென்னாப் பிரிக்காவைச் சேர்ந்த புரூஸ் ஹென்றி என்பவர் தனது உறவினர்களுடன் தொலை பேசியில் பேச தனக்கு அனுமதியளிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.