அரசின் அறிவிப்புகள் மலையாகவும், செயல்பாடுகள் மடுவாகவும் உள்ளதாக எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் நீர்வளத்துறை மானிய கோரிக்கை விவாதத்தில் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது: ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22-ம் தேதி உலக தண்ணீர் தினம் கொண்டாடி வருகிறோம். தமிழக மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. தமிழகத்திலுள்ள ஏரி, குளங்கள், கால்வாய் போன்ற நீர்நிலைகளை குடிமராமத்து திட்டத்தின்கீழ் விவசாயிகளை பயன்படுத்தி குடிமராமத்து திட்டம் என்ற வரலாற்று சாதனையை படைத்தவர் அன்றைய முதல்வர் பழனிசாமி.