தேமுதிக தேர்தல் அறிக்கையின் அம்சங்கள் தமிழக பட்ஜெட்டில் இடம்பெற்றதால், அதை வரவேற்றோம். வேறு அரசியல் காரணம் இல்லை என்று அந்த கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது 56-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் உள்ள கடசியின் அலுவலகத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி, தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். அதன்பின் கட்சி அலுவலகத்தில் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினர். அப்போது அவரது மகன் விஜய பிரபாகரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். இதேபோல், சாலிக்கிராமத்தில் உள்ள தனது இல்லத்திலும் தேமுதிக சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.