ராமேசுவரம்: டெல்லியில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்த தமிழக மீனவர்களின் பிரதிநிதிகள், தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வலியுறுத்தினர்.
அண்மைக்காலமாக இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது, படகுகள் பறிமுதல் செய்யப்படுவது அதிகரித்துள்ளதுடன், மீனவர்களுக்கு சிறை தண்டனை மற்றும் அதிக அபராதம் விதிக்கப்படுகிறது. இது தமிழக மீனவர்களிடையே அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2 மாதங்களில் மட்டும் 19 படகுகள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு, 145 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.