கொழும்பு: மீனவர்கள் பிரச்சினையில் மனிதாபிமான அணுகுமுறையைக் கடைபிடிக்க இந்தியாவும் இலங்கையும் ஒப்புக்கொண்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மூன்று நாள் பயணமாக இலங்கைக்கு பிரதமர் மோடி சென்றுள்ளார். இன்று அவர் கொழும்புவில், அந்நாட்டு அதிபர் அனுர குமார திசநாயக்கவுடன் இணைந்து கூட்டாக செய்தியாளர்களை பேட்டியளித்தார். அப்போது பிரதமர் மோடி கூறுகையில், "இன்று நாங்கள் மீனவர்கள் பிரச்சினை குறித்து பேசினோம். மீனவர்கள் பிரச்சினையில் மனிதாபிமான அணுகுமுறையை கடைபிடிக்க ஒப்புக்கொண்டுள்ளோம். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவித்து, அவர்களின் படகுகளை ஒப்படைக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. சமரசம் குறித்தும் நாங்கள் விவாதித்தோம்.