ராமேசுவரம்: தமிழக மீனவர்கள் 4 பேரை விடுதலை செய்தும், இரண்டு படகு ஓட்டுநர்களுக்கு ஆறு மாதம் சிறைத் தண்டனை மற்றும் அபராரம் விதித்தும் இலங்கையில் உள்ள ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற சூசை வியாகுலம், ஆல்ட்ரின் ஆகிய இருவருக்குச் சொந்தமான 2 விசைப்படகுகளை நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் பிப்ரவரி 20ந் தேதி சிறைப்பிடித்தனர். படகுகளிலிருந்த ஜான் முத்துக்குமார், லவ்சன், பவுல்ராஜ், அந்தோணி செல்வம், ஜான்போஸ்கோ, ஜான்ராஜ் ஆகிய 6 மீனவர்கள் மீது, எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.