சென்னை: வணிகவரித்துறையில் நடப்பு 2024-25 நிதி ஆண்டில் ஜன.31ம் தேதி வரை ரூ. 1,13,235 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என்று தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி மூர்த்தி கூறியுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி, தலைமையில் இன்று (பிப்.18) சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை வளாகக் கூட்டரங்கில் 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கான அனைத்து இணை ஆணையர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.