சென்னை: தமிழுக்காக நாம் அனைவரும் ஒன்றுபட்டு போராடுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்நாடு தன்னோட உயிர்ப்பிரச்சனையான மொழிப்போரையும், உரிமைப் பிரச்சனையான தொகுதி மறுசீரமைப்பையும் எதிர்க்கிறது. மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு ஆகியவற்றில் ஒன்றிய பாஜக அரசின் உண்மையான நோக்கத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். தொகுதி மறுசீரமைப்பு என்பது நம் மாநிலத்தின் சுயமரியாதை, சமூக நீதி, சமூக நலத்திட்டங்கள் பெரிதும் பாதிக்கும் என்று கூறினார்.
The post தமிழுக்காக நாம் அனைவரும் ஒன்றுபட்டு போராடுவோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.