சென்னை: தமிழ்நாடு கால்பந்து சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் நாளை (மே 31) காலை 10 மணிக்கு நேரு விளையாட்டரங்கில் நடைபெறுகிறது. கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் செல்லாது என நீதிமன்றம் அறிவித்ததைத் தொடர்ந்து தற்போது மறு தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் பொறுப்பாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது.
10 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இந்தத் தேர்தலில் இம்முறை தலைவர் பதவிக்கு சுரேஷ் மனோகர் (மதுரை ) போட்டியிடுகிறார். அவரது அணியில் பொருளாளர் பதவிக்கு சிவானந்தம் (தஞ்சாவூர்), துணைத் தலைவர் பதவிக்கு ரவிக்குமார் (திருவள்ளூர்), ராபர்ட் குமார் (காஞ்சிபுரம்), ஆனந்த் (சிவகங்கை), ராதா (கடலூர்) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.