சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்ட மசோதா, தமிழ்நாடு பொது கட்டட உரிம திருத்தச் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஏப்.9ம் தேதி ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் ஏப்.11ம் தேதி அரசிதழில் வெளியிட்டுள்ளது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மசோதாக்களுக்கு ஒப்புதல் தர ஆளுநர், ஜனாதிபதிக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு நிர்ணயித்து தீர்ப்பளித்துள்ள நிலையில் 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
The post தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்..!! appeared first on Dinakaran.