நாடு முழுவதும் எஸ்டிபிஐ நிர்வாகிகளின் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா (பிஎப்ஐ) அமைப்பின் அரசியல் பிரிவாக இந்திய சமுதாய ஜனநாயக (எஸ்டிபிஐ) கட்சி கருதப்படுகிறது. சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் எஸ்டிபிஐ தேசிய தலைவர் பைஸி கடந்த 3-ம் தேதி டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.