சென்னை: தமிழ்நாட்டை தொடர்ச்சியாக வஞ்சித்து வரும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து 29ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார். 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய ரூ.4,034 கோடியை வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அனைத்து ஒன்றியங்களிலும் 29ம் தேதி திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
The post தமிழ்நாட்டை தொடர்ச்சியாக வஞ்சித்து வரும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து 29ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும்: அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு appeared first on Dinakaran.