சென்னை: இலக்கியச் செல்வர் குமரி அனந்தனின் மறைவு தமிழகத்திற்கும், தமிழ் இலக்கிய உலகுக்கும் மிகப்பெரிய இழப்பு என்று ஜி.கே.வாசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
குமரி அனந்தனின் மறைவுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: தமிழக மூத்த அரசியல்வாதி, இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் உடல்நிலைக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன்.