சென்னை: தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காக பாடுபட்டு வரும் பேராசிரியர் தமிழவன், ப.திருநாவுக்கரசு ஆகியோருக்கு மா.அரங்கநாதன் இலக்கிய விருதை உச்ச நீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன் வழங்கினார்.
‘முன்றில்’ இலக்கிய அமைப்பு சார்பில் மா.அரங்கநாதன் இலக்கிய விருது-2025 வழங்கும் நிகழ்ச்சி சென்னை அண்ணா சாலையில் உள்ள ராணி சீதை அரங்கில் நடைபெற்றது. இதில் உச்ச நீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன் பங்கேற்று, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காக பாடுபட்டு வரும் பேராசிரியர் தமிழவன், ப.திருநாவுக்கரசு ஆகியோருக்கு ‘மா.அரங்கநாதன் இலக்கிய விருது’ வழங்கி கவுரவித்தார். தொடர்ந்து ‘மா.அரங்கநாதன்’ மற்றும் ‘முன்றில்’ ஆகிய வலைதளங்களை தொடங்கிவைத்தார்.