மதுரை: தமிழகத்தில் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், மும்மொழிக் கொள்கை அடிப்படையில் 2 ஆயிரம் ஆண்டு பழமையான தமிழ் மொழியை 3-வது மொழியாக அறிவிக்கக் கோரி பிற மாநில முதல்வர்களுக்கு தமிழக பாஜக பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் கடிதம் அனுப்பியுள்ளார்.
தமிழகத்தில் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜக கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறது. இந்நிலையில் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்களுக்கு தங்கள் மாநிலங்களில் மூன்றாவது மொழியாக தமிழ் மொழியை கற்பிக்க வேண்டும் என பாஜக பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் கடிதம் அனுப்பியுள்ளார்.