சென்னை: இந்திய கைவினைக் கவுன்சில் நடத்தும் ‘தறி’ என்ற கைத்தறிப் புடவைகள் விற்பனைக் கண்காட்சி நேற்று தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில், ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் விலையிலான புடவைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
நெசவாளர்களுக்கு உதவுவதற்காக `தறி' என்ற பெயரில் கைத்தறி புடவைகள் விற்பனை கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை, கதீட்ரல் சாலையில் உள்ள வெல்கம் ஓட்டலில் நேற்று தொடங்கிய இந்த விற்பனைக் கண்காட்சி இன்றுடன் (8-ம் தேதி) நிறைவடைகிறது. காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை இந்த விற்பனை நடைபெறும்.