புதுடெல்லி: “தற்காலத்துக்கு அவுரங்கசீப் சமாதி விவகாரம் பொருந்தாது,” என்று ஆர்எஸ்எஸ் பிரச்சாரப் பிரிவின் தலைவர் சுனில் அம்பேகர் தெரிவித்துள்ளார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பு துவங்கி வரும் அக்டோபரில் நூறாவது ஆண்டு நிறைவு பெறுகிறது. இதற்கான கொண்டாட்ட கூட்டங்களை நாடு முழுவதிலும் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் நடத்தி வருகின்றனர். அந்தவகையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வரும் மார்ச் 21 முதல் 23 வரை கூட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பான ஏற்பாடுகளுக்காக ஆர்எஸ்எஸ் தலைவர்களில் ஒருவரான சுனில் அம்பேகர் பெங்களூரூ வந்திருந்தார்.அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், அவுரங்கசீப் சமாதி விவகாரம் குறித்து கேட்கபட்ட கேள்விக்கு, “எதன் பேரிலும் கலவரம் என்பது நம் சமூகத்துக்கு நல்லதல்ல. அவுரங்கசீப் சமாதி விவகாரம் இன்றையக் காலகட்டத்துக்கு பொருந்தாது” என்று கூறியுள்ளார்.