விரைவில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து சோயா பீன்ஸ் விவகாரம் குறித்து பேச இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் “சீனா பேச்சுவார்த்தை காரணங்களுக்காக மட்டுமே நம்மிடமிருந்து சோயாபீன்ஸ் வாங்காமல் இருப்பதால், நம் நாட்டின் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். வரிகளின் மூலம் நாம் நிறைய பணம் சம்பாதித்துள்ளோம். அந்தப் பணத்தில் ஒரு சிறிய பகுதியை கொண்டு நம் விவசாயிகளுக்கு உதவப் போகிறோம். நான் ஒருபோதும் நம் விவசாயிகளை கைவிட மாட்டேன்.