கடந்த 22-ம் தேதி காஷ்மீரில் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். அவர்களில் கொல்கத்தாவை சேர்ந்த இன்ஜினீயர் பிதன் அதிகாரியும் (40) ஒருவர். அவரது மனைவி சோகினி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் இயற்கை அழகை ரசித்து கொண்டிருந்தோம். அப்போது திடீரென ஒரு தீவிரவாதி எங்களை வழிமறித்தார். அவரது தலைமையில் கேமரா அணிந்திருந்தார்.