சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக சனிக்கிழமை அன்று நடைபெற்ற ஆட்டத்தில் 25 ரன்களில் வெற்றி பெற்றது டெல்லி கேப்பிடல்ஸ்.
இந்நிலையில், அது குறித்து அந்த அணியின் கேப்டன் அக்சர் படேல் கூறும்போது, “தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றது பெரிய விஷயம். பெரியதோ சிறியதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்த நாங்கள் விரும்புகிறோம். இதுதான் திட்டம், அது இதுவரை வெற்றிகரமாக உள்ளது.