பிரிட்டிஷ் எழுத்தாளர் ஹென்றி உட் எழுதிய புகழ்பெற்ற நாவல்கள், ‘டான்பரி ஹவுஸ்’, ‘ஈஸ்ட் லின்’. இதில் டான்பரி ஹவுஸ் நாவல் தந்த பாதிப்பில் எஸ்.எஸ்.வாசன் எழுதிய தொடர்கதையின் அடிப்படையில் எம்.ஜி.ஆர் நடித்த ‘சதிலீலாவதி’ உருவானது. ஈஸ்ட் லின் கதையை அப்படியே எடுத்து ‘தாய் உள்ளம்’ ஆக்கினார் இயக்குநர் கே.ராம்நாத்.
ஜெமினி ஸ்டூடியோவில் பணியாற்றிக் கொண்டிருந்த கே.ராம்நாத் அங்கிருந்து 1947-ம் ஆண்டு விலகி, நாராயணன் கம்பெனியில் சேர்ந்தார். அந்த நிறுவனம் தயாரித்த படம் இது.