நத்தம்: நத்தம் அருகே அஞ்சுகுழிபட்டி சுங்கச்சாவடியைத் திறக்க எதிர்ப்பு தெரிவித்து ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளைப் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் சாலையில் அஞ்சுகுழிப்பட்டியில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை சுமார் 270 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டது. இதை நான்கு வழிச்சாலையாக மாற்றாமல், இருவழிச்சாலையில் விரிவாக்கப்பணி மட்டுமே நடந்துள்ளது. நத்தம் வரை சாலை முழுவதும் பணிகள் முழுமையடையாமலும் உள்ளது.