வத்தலக்குண்டு: திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியை அப்பகுதி மக்கள் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து தேனி செல்லும் வழியில் செம்பட்டி-வத்தலக்குண்டு இடையே தேசிய நெடுஞ்சாலையில் லட்சுமிபுரம் என்ற இடத்தில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு பல ஆண்டுகளாகியும், மக்கள் எதிர்ப்பு காரணமாகப் பயன்பாட்டுக்கு வராமலேயே இருந்தது.