திப்பு சுல்தானின் வாரிசு என மக்களை நம்பவைத்து ரூ.5.5 கோடி சுருட்டிய தெலங்கானா மருத்துவரை அம்மாநில போலீஸார் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம், கம்பம் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரஹீம் சுல்தான் ராஜு. இவர் தன்னை அனைவரிடமும் திப்பு சுல்தானின் வாரிசு என கூறிக்கொள்வார். எம்பிபிஎஸ் படித்து மருத்துவரான இவர் தெலங்கானா மாநிலம், வாரங்கல் மாவட்டம், ஜனகாமாவில் கே.கே ஹாஸ்பிடல்ஸ் எனும் பெயரில் ஒரு மருத்துவமனையை நடத்தி வந்தார். அங்கும் தான் ஒரு திப்பு சுல்தான் வாரிசு எனவும் ரூ.700 கோடிக்கு சொத்துகள் இருப்பதாகவும் தன்னிடம் வரும் நோயாளிகள், அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரிடமும் கூறி வந்துள்ளார்.