மதுரை: திமுக தொண்டர்கள் ரத்தமும், வியர்வையும் சிந்தி உழைத்ததாலேயே சு.வெங்கடேசன் எம்.பி.யாகி யுள்ளார் என்று மாநகராட்சி கூட்டத்தில் திமுக மேயரும், அக்கட்சி கவுன்சிலர்களும் கொந்தளித்தனர்.
இந்தியாவின் தூய்மை நகரங்களின் பட்டியலில் மதுரை கடைசி இடம்பிடித்தது குறித்து சு.வெங்கடேசன் எம்.பி. விமர்சித்திருந்தார். மதுரை நகரின் தூய்மை மோசமாக உள்ளது, மாநாகராட்சி சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். தூய்மையைப் பாதுகாக்க முதல்வர் தலையிட வேண்டும் என்று அவர் தெரிவித்திருந்தார்.