புதுடெல்லி: திமுகவின் இந்தி எதிர்ப்பு விவகாரத்தில் அதன் கூட்டணிக் கட்சிகளின் நிலை என்ன என்பது குறித்து தெளிவுபடுத்த வேண்டுமென பாஜக தலைமையிலான மத்திய ஆட்சியில் இடம்பெற்றுள்ள ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அணில் துபே வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து உ.பி.,யின் ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அனில் துபே கூறியதாவது: இண்டியா கூட்டணியின் முக்கிய அங்கமான சமாஜ்வாதி கட்சி மற்றும் காங்கிரஸ், திமுகவின் புதிய கல்விக் கொள்கை 2020-க்கு எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து தங்கள் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும். தமிழகத்தில் மும்மொழி கொள்கையை எதிர்ப்பதன் மூலம் திமுக அற்ப அரசியலில் ஈடுபட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் அவரது அரசும் தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்படுவதாகப் பொய்யாகக் குற்றம் சாட்டுகின்றனர்.