மதுரை: திமுகவின் ஏமாற்று அரசியலுக்கு இஸ்லாமியர்கள் பலியாகிவிடக் கூடாது என பாஜக சிறுபான்மையினர் பிரிவு தேசிய யெலாளர் வேலூர் இப்ராகிம் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழக பாஜகவில் வக்பு வாரிய திருத்த சட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மாநில பொதுச் செயலாளர் பொன்.பாலகணபதி தலைமையில் 5 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் மதுரையில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 18) ஆலோசனை நடத்தினர். இதில் பாஜக சிறுபான்மையினர் பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.