வேலூர்: தேசிய ஜனநாயக கூட்டணி பலமாக இருப்பதால் சட்டசபையில் பயத்தில் மாநில உரிமை போன்ற தீர்மானங்களை திமுக நிறைவேற்றி வருகிறது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
வேலூரில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘திமுக என்ற தீய சக்தி கூட்டணியை விரட்ட தேசிய ஜனநாயக கூட்டணி இன்னும் பலப்படுத்த வேண்டும். இதற்காக, அம்மாவின் தொண்டர்கள் எந்த கட்சியில் இருந்தாலும் ஓரணியில் இணைந்து செயல்பட வேண்டும். இன்னும் மற்ற கட்சிகள் திமுக என்ற தீய சக்தியை முடிவுக்கு கொண்டுவர வலுவான கூட்டணியை பாஜக அமைத்து வருகிறது.