விருதுநகர்: “யுபிஎஸ்சி தேர்வுகளில் தமிழகத்தின் பங்கு குறைகிறது. தமிழக மாணவர்கள் பின்தங்குகிறார்கள். இதற்கு திமுக, அதிமுகவின் மொழிக் கொள்கைகள் தான் காரணம்” என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து விருதுநகரில் இன்று (பிப்.24) அவர் அளித்த பேட்டியில், “தமிழகத்தில் 69 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படுவதாக திமுக, அதிமுக பெருமை பேசுகின்றன. பிற்படுத்தப்படோருக்கு பாதிப்பு வந்தபிறகு 9-வது அட்டவணையில் சேர்க்கக் கூடிய அளவுக்கு முயற்சி எடுத்தவர்கள், தமிழகத்தில் ஏறக்குறைய 20 மாவட்டங்களில் வாழக்கூடிய தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்துக்கான இட ஒதுக்கீட்டையும், வட தமிழகத்தில் வாழக்கூடிய பட்டியலின மக்களுக்கான 18 சதவிகித இட ஒதுக்கீட்டையும் 3 சதவிகிதத்துக்கும் குறைவாக இருக்கக் கூடிய ஆந்திராவை பூர்விகமாகக் கொண்ட ஆதி ஆந்திரர்களுக்கும் கடந்த 15 ஆண்டுகளாக 18 சதவிகித இட ஒதுக்கீடும் வழங்கக் கூடிய அநீதி நடக்கிறது.