அண்மையில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளுடன் காணொலியில் கலந்துரையாடினார். அப்போது, ஒரு சில மாவட்ட நிர்வாகிகள் திமுக அமைச்சர்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு கட்சிக்கு துரோகம் செய்வதாக கண்டிப்புடன் சுட்டிக்காட்டினார். கண்டிப்புக்கு ஆளானதில் திருச்சி அதிமுக நிர்வாகிகளும் அடக்கம்.
திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை அமைச்சர்கள் கே.என்.நேருவும் அன்பில் மகேஸும் திமுக-வுக்கு அரணாக இருப்பவர்கள். இவர்களோடு தொடர்புவைத்துக் கொண்டு அதிமுக பொறுப்பாளர்கள் சிலர் தங்களுக்கு தேவையானதை சாதித்துக் கொள்வதாக தலைமைக்கு புகார்கள் பறந்தன. அவர்களைத்தான் காணொலி கூட்டத்தில் கண்டித்திருக்கிறார் பழனிசாமி.