திமுக அரசின் நீட் வாக்குறுதியைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக மாணவரணி சார்பில், மாவட்ட தலை நகரங்களில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் ‘நீட் தேர்வை ஆட்சிக்கு வந்தவுடன் ரத்து செய்வோம் என்று பொய்யான வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக அரசால் தங்கள் இன்னுயிரை மாய்த்துக்கொண்ட 22 மாணவ, மாணவிகளுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி, திமுக அரசை கண்டித்து அதிமுக மாணவரணி சார்பில் ஏப்.19-ம் தேதி, தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்’ என்று அறிவித்திருந்தார்.