சென்னை: திமுக ஆட்சியில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான தாக்குதல்களில் இருந்து தற்காத்துக்கொள்ள மகளிருக்கு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு அளிக்கப்படும் என்று அதிமுக மகளிரணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதிமுக மகளிரணி சார்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று (பிப்.6) நடைபெற்றது. கட்சியின் மகளிரணி செயலாளர் பா.வளர்மதி தலைமையில், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.கோகுல இந்திரா, எஸ்.வளர்மதி, வி.சரோஜா, வி.எம்.ராஜலட்சுமி முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: