
கரூர் கூட்ட நெரிசல் துயரத்துக்குப் பின்னர் ஒரு வழியாக மீண்டும் வெளியில் வந்துவிட்டார் விஜய். அத்துடன், தவெக சிறப்பு பொதுக்குழுவில் திமுக மீது கடும் தாக்குதலை தொடுத்த விஜய், பாஜக பற்றி மூச்சு கூட விடாதது பேசுபொருளாகி இருக்கிறது.
கரூரில் செப்டம்பர் 27-ல் நடந்த கூட்ட நெரிசல் உயிரிழப்புகளுக்குப் பின்னர், ஒரு மாதத்துக்கும் மேலாக ‘சைலண்ட்’ மோடில் இருந்த தவெக இப்போது ‘வைப்ரேஷன் மோடு’க்கு மாறியிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் உறவினர்களை மாமல்லபுரத்துக்கு வரவழைத்து சந்தித்த விஜய், புதன்கிழமை நடந்த சிறப்பு பொதுக்குழுவில் வெகுண்டெழுந்து பேசியிருக்கிறார்.

