சென்னை: “திமுக தலைவர் எனக்கு கொடுத்திருக்கும், இந்த அங்கீகாரமானது, நான் இன்னும் மேலும் கடுமையாக கட்சிக்காக உழைத்து, இன்னும் பலரை கட்சியில் இணைத்து திமுக என்கிற இந்த தவிர்க்க முடியாத சக்தி மேலும் வலிமை பெற உழைப்பதற்கானது. அதுவே என் கடமை. எனக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்தப் பதவியை, நான் ஒரு பொறுப்பாக கருதுகிறேன்” என்று அக்கட்சியின் புதிய துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா கூறியுள்ளார்.
திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்டு, அப்பொறுப்பில் திருச்சி சிவா நியமிக்கப்பட்டுள்ளார்.