திரிவேணி சங்கம நீர் புனித நீராடுவதற்கு தகுதியானது என்றும் மகா கும்பமேளாவை சிறுமைப்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர் என்றும் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றம்சாட்டி உள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை 56.26 கோடி பேர் புனித நீராடி உள்ளனர். வரும் 26-ம் தேதியுடன் கும்பமேளா நிறைவு பெற உள்ளது.