திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆம்னி பேருந்து தீப்பிடித்த விபத்தில் 15 பயணிகள் காயம் அடைந்துள்ளனர். மார்த்தாண்டம் சென்ற ஆம்னி பேருந்து யாகபுரம் என்ற பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துகுள்ளானது. சுமார் 30அடி பள்ளத்தில் கவிழ்ந்த ஆம்னி பேருந்து தீ பிடித்து எரிந்ததில்15 பயணிகள் காயம் அடைந்துள்ளனர். ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து தப்பியதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
The post திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆம்னி பேருந்து தீப்பிடித்த விபத்தில் 15 பயணிகள் காயம் appeared first on Dinakaran.